ஷீஆவின் தோற்றம் எப்போது ?Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 ஷீஆ இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய ஒரு மத்ஹப் என்று கருதும் சிலரே மேலுள்ள வினாவை எழுப்புவர். வரலாற்றை யதார்த்த கண் கொண்டு பார்க்கும் போதே இவர்களின் ஷீஆவைப் பற்றிய யூகம் தெளிவாகும். எப்போது தோற்றம் பெற்றது என்ற கேள்வியை ஷீயாவை வைத்துக் கேட்காமல் உண்மை யிலேயே இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய அமைப்புக்களை வைத்து வினவுவது சாலச் சிறந்ததாக இருக்கும். கவாரிஜ், முர்ஜிஆ போன்றவைகள் அரசியல் கொந்தளிப்புகளாலும், கொள்கை கோட்பாடுகளாலும் உருவானவைகள் இவைகளை நோக்கி மேலுள்ள வினா எழுவது நியாயம்தான். மாறாக ஷீயாவை அவ்வாறு வினவுவது சரியல்ல ஏனெனில் ஷீயா இஸ்லாத்தில் புதிதாக தோற்றம் பெற்ற ஒரு அமைப்பு அல்ல. மாறாக ஷீயாவும் சுன்னி போன்று இஸ்லாத்தின் வேரொரு முகமாகும் நன்றாக கூறின் இஸ்லாத்தை ஒரு இரும்பு நாணயமாக கருதினால் அதன் ஒரு பக்கம் சுன்னாவென்றும் மறுபக்கத்தை ஷீயாவென்றும் கருதலாம். ஷீயாவின் உண்மை வடிவத்தை கூறுவதாயின் பின்வறுமாறு கூறலாம். ஷீயா என்பது நபி (ஸல்) அவர்களினால் கொண்டு வரப்பட்ட தெளிவான இஸ்லாம், அவர்களின் கண் மறைவிற்குப் பின்னும் அதன் ஒளி மங்கி மறையக்கூடாது என்பதற்காக அவர்கள் தன்னிகர் போன்ற ஒரு தலைமைத்துவத்தை இஸ்லாத்தை பாதுகாக்க உருவாக்கினார்கள் என்பதை ஆதார பூர்வமாக ஏற்று அத்தலைமைத்துவத்தின் நிழலில் வாழும் ஒரு இஸ்லாமிய சமூகம். ஷீயா என்பது, இஸ்லாத்தை தனது வழியாகக் கொண்டு அதற்கு புத்துயிர் கொடுத்து கியாமத் நாள் வரைக்கும் பாதுகாக்க நாயகத்தால் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு இமாம் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதாக நம்பிக்கை வைத்துள்ள ஒரு இஸ்லாமிய சமூகம். இன்னும் கூறுவதானால் நாயகத்தின் இஸ்லாம் இறுதி நாள் வரை பாதுகாக்கப்படுமா? என்று அஞ்சும் பட்சத்தில் நாயகம் எம் பயத்தை நீக்கி தனது இஸ்லாமிய பாதுகாவலர்கள் என்று குறிப்பிட்ட சிலரை நியமித்துத் தந்த இஸ்லாத்தை பாதுகாக் கும் திட்டத்தை முன்காட்டி நிற்பவர்கள் தான் ஷீஆக்கள். நாயகம் ஸல் அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் அவர்களின் கண்மறைவுக்குப் பின்னும் அதே தூய வடி வத்தில் பாதுகாக்கப்படவேண்டும். அது எஞ்சி இருக்க வேண்டும். என்று குரல் கொடுக்கும் பட்சத்தில் அங்கு தோள் கொடுத்து உதவி செய்ய வருபவர்கள் தான் ஷீயாக்கள். மேற்கூறப்பட்ட வரைவிலக்கணத்திற்கமைய ஷீயா மத்ஹபின் கோட்பாடு என்னவெனில் இஸ்லாத்தின் இறுதிநாள் வரையான முடிவற்ற வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்க நாயகம் போன்ற தலைவர்கள், வழி காட்டிகள் தோன்ற வேண்டும் என்றும் அத்தலைவர்கள் வழிகாட்டிகள் நாயகம் மூலம் தெரிவு செய்யப் பட்டு விட்டனர் என்றும் கருதுகின்றனர். இதனால் ஷீஆவை இஸ்லாத்தின் அமுலாக்கப் பிரிவு என்றும் அதனை பின்பற்றுவோரை ஷீயாக்கள் என்றும் கூறுகின்றோம். எனவே ஷீஆவை புதிதாக இஸ்லாத்தில் உதித்த பிரிவு என்று கருதுவதை விட்டுவிட்டு இஸ்லாத்தை இருதிநாள் வரை பாதுகாத்து கரைசேர்க்க அமைக்கப்பட்ட திட்டம் என்பதே சாலச் சிறந்தது. இவை யாவையும் நாம் அல்குர்ஆன் அல்ஹதீஸ்களில் தெளிவாக காண்கின்றோம்! ஷீயாக்கள் தன் கூற்றுக்கு ஆதாரமாக குர்ஆனின் சூரதுல் மாயிதாவின் 67,69 வது வசனங்களை முன்வைக்கின்றனர். இவ்வசனங்கள் நாயகத்திற்குப் பின் இஸ்லாத்தை பாதுகாக்க தோன்றும் வழிகாட்டிகளைக் கூறுகின்றது இவ்வாதத்திற்கு பக்க பலமாக அவைகள் இறங்கிய காரணங்களை ஹதீஸ் கிரந்தங்களில் காட்டுகின்ற னர். அதே போன்று சூரதுன் நிஸாவின் 59 வது வசனத்தையும் நாயகத்திற்குப் பின் நபிகளாரின் சமுகத்திற்குரிய பொறுப்பதிகாரிகள் என்று அறிமுகம் செய்கின்றனர்.
|