மறுமை வாழ்வு




Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99

Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103

 

மறுமை வாழ்வு

1. மறுமை இன்றி வாழ்வில் அர்த்தமில்லை

மஆத் என்பது மறுமை நாள் பற்றிய நம்பிக்கையைக் குறிக்கின்றது. உலகில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் மறுமை நாளில் மீள உயிர்ப்பித்து எழுப்பப்படுவார்களென்றும், அவர்களது செயல்களனைத்தும் விசாரிக்கப்பட்டு, நல்லடியார் கள் சுவனத்திற்கும், பாவிகள் நரகிற்கும் அனுப்பப் படுவர் என்றும் நாம் நம்பிக்கை கொள்கிறோம்.

'அல்லாஹ், அவனைத் தவிர வேறு இறைவனில்லை. அவன், நிச்சயமாக மறுமை நாளில் உங்களை ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமில்லை."    (04: 87)

'எவர் வரம்பு மீறி இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத் துக் கொண்டாரோ, நிச்சயமாக அவர் ஒதுங்குமிடம் நரகமாகும். மேலும், எவர் தன் இறைவனின் சந்நிதியைப் பயந்து, மனோ இச்சையிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண்டாரோ, நிச்சயமாக அவர் ஒதுங்குமிடம் சுவனமாகும்."   (80: 37-41)

இவ்வுலகமென்பது, முடிவற்ற நிலையான ஒரு வீட்டை அடைவதற்காக மனிதர்கள் கடந்து செல்லும் பாலமாக இருக்கின்றது என்பது எமது நம்பிக்கையாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வேறொரு வீட்டிற்காக பயிர் விதைக்கப்படுகின்ற ஒரு விளைநிலமாகும்.

ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்:

'உலகத்தையே உண்மையாகக் கொண்டவருக்கு அது உண்மையின் இருப்பிடமாகும். அதனைப் பயன்படுத்தியவர்களுக்கு அது செல்வங்களைத் தருமிடமாகும். அதிலிருந்து கற்றுக் கொள்பவருக்கு அது படிப்பினை தரும் இடமாகும். அது இறைநேசர்களின் வழிபாட்டுத் தலமாகவும் மலக்குகளின் தொழும் இடமாகவும் வஹியின் இறங்கு தளமாகவும் அல்லாஹ்வுடைய நேசர்களின் சந்தையாகவும் இருக்கின்றது."  (நஹ்ஜுல் பலாகா - மொழி 131)

2. மறுமை பற்றிய ஆதாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 next