நபி ( ஸல் ) அவர்களின் மனைவியர்Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 நபி ( ஸல் ) அவர்களின் மனைவியர் நாயகத்துடைய குடும்பத்தினர் மானக்கேடான விடயத்தால் அழுக்கடைந்திருப்பதென்பது மக்களது உள்ளங்கள் இறைத் தூதரை வெறுப்பதற்கு காரணமாகிவிடும் . எனவே , நபியவர்களுடைய குடும்பத்தினரையும் அவர்களது மனைவியரையும் மானக்கேடான செயல்களிலிருந்தும் விபசாரம் போன்ற கொடிய பாவங்களிலிருந்தும் பாதுகாப்பது அல்லாஹ்வுக்குக் கடமையாகும் . அன்றேல் இறை அழைப்பு வீணாகி விடும் . இத்தகையை புத்தி ரீதியான ஆதாரத்தின் படி நபியவர்கள் தமது மனைவிமார்களின் புறவயமான பரிசுத்தத் தன்மை மட்டுமன்றி , அவர்களது அகவயமான பரிசுத்த தன்மையும் உறுதிப்படுத்தப்படுகின்றது , அதை மக்கள் அறியாதிருப்பினும் சரியே . ( அல்லமா தபாதபாயி , தப்ஸீருல் மீஸான் பாகம் 15 , பக்கம் 102 ) இதன்படி ஷீஆக்கள் எவ்வகையான பழியையும் , குற்றச்சாட்டையும் அன்னை ஆயிஷா அவர்களின் விடயத்தில் கூறுவதை ஆமோதிப்பதில்லை என்பது தெளிவாகின்றது . அதேவேளை , அன்னை ஆயிஷா நாயகியுடன் தொடர்பு பட்ட இஃப்க் ( பழிகூறல் , இட்டுக்கட்டல் ) உடைய சம்பவத்தை அஹ்லுஸ் சுன்னத்த்தினரே அன்னை ஆயிஷா நாயகியுடன் தொடர்பு படுத்திக் கூறி அவர்கள் மீது குற்றமும் சாட்டுகின்ற்றனர் . குறிப்பிட்ட வசனம் அன்னை ஆயிஷா அவர்களின் விடயத்திலேயே இறங்கியது எனும் அஹ்லுஸ்ஸுன்னாக்களின் வாதம் இதனையே காண்பிக்கின்றது . மாறாக , ஷீஆக்களோ குறித்த வசனம் அன்னை ஆயிஷா நாயகி விடத்தில் இறங்கவேயில்லை எனவும் அது அன்னை மாரியதுல் கிப்திய்யா என்ற மற்றொரு நபியின் மனைவியின் விடயத்தில் தான் இறங்கியது எனக் கூறி அன்னை மாரியதுல் கிப்திய்யா அவர்கள் இச் செயலில் ஈடுபட்டவர்கள் அல்ல என்பதை அந்த அல்குர்ஆன் வசனத்தையும் அமீருல் முஃமினீன் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆராய்ச்சியையும் வைத்து நிருபிக்கின்றனர் . ( தப்ஸீர் நூருஸ் ஸகலைன் பாகம் 3 பக்கம் 851 )
|